Friday 13 April 2012

உணவும், வகையும் - தாமச உணவு!

உணவும், வகையும் - தாமச உணவு!


ஒருவர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளே அவரின் குண நலன்களை தீர்மானிக்கிறது என்ற நமது முன்னோர்களின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். மூன்று வகையான உணவுகள் மூன்று விதமான குண நலன்களுக்கு காரணமாய் இருக்கிறது என்பதையும், முதல் இரண்டு வகை உணவுகள் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் இன்று தாமச குணத்தை தரும் உணவு வகை பற்றி பார்ப்போம்.
முதலில் தாமச குணம் என்றால் என்ன?, அது எத்தகையது என்பதை பார்த்துவிடுவோம்.
மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.
இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.
இப்படியான குணத்தை ஒருவருக்கு, அவர் உட்கொள்ளும் உணவுகள்தான் கொண்டு தருகின்றன என்பதை தற்போதை நவீன அறிவியலும் ஆய்வுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இம் மூன்று வகை உணவுகளின் பட்டியலைக் கொண்டு, இதுநாள் வரை நாம் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம், நமது குணநலன்கள் எத்தகையதாக இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்.


தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

1. வெங்காயம்
2. வெள்ளைப் பூண்டு
3. முருங்கைக் கீரை
4. பசலைக் கீரை
5. கலவைக் கீரை
6. ஆரைக் கீரை
7. சிறு கீரை
8. உருளைக் கிழங்கு
9. பெருவல்லிக் கிழங்கு
10. முள்ளங்கி
11. சிறுவள்ளிக் கிழங்கு
12. மரவள்ளிக் கிழங்கு
13. முருங்கைக் காய்
14. பீர்க்கை
15. வாளவரைக்காய்
16. மொச்சை
17. சுரைக்காய்
18. அவரை
19. கொள்
20. செஞ்சோளம்
21. கருஞ்சோளம்
22. பட்டாணி
23. தட்டைப்பயறு
24. கம்பு
25. வரகு
26. கேழ்வரகு
27. புழுங்கல் அரிசி
28. கத்திரிக்காய்
29. முருங்கைப்பூ
30. ஈச்ச வெள்ளம்
31. பனைவெல்லம்
32. பனங்கற்கண்டு
33. கள் வகைகள்
34. நுங்கு
35. விளக்கெண்ணெய்
36. பருப்புக் கீரை
37. புளிச்சக்கீரை
38. காசினிக்கீரை
39. பனம்பழம்
40. சீதாப்பழம்
41. பண்ணைக் கீரை
42. முந்திரிப்பழம்
43. எருமைப்பால்
44. எருமை தயிர்
45. எருமை வெண்ணெய்
46. எருமை நெய்


இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம். 

No comments:

Post a Comment